உமர்கய்யாம் பாடல்கள்

>வெய்யிற் கேற்ற நிழலுண்டு
>வீசும் தென்றல் காற்றுண்டு;
>கையிற் கம்பன் கவியுண்டு
>கவசம் நிறைய மதுவுண்டு;
>தெய்வ கீதம் பலவுண்டு
>தெரிந்து பாட நீயுமுண்டு;
>வையம் தனிலிவ் வனமன்றி
>வாழும் சொர்க்கம் வேறுண்டோ?

********************************

>எழுதிச் செல்லும் விதியின் கை
>எழுதி எழுதி மேற்செல்லும்
>தொழுது கெஞ்சி நின்றாலும்
>சூழ்ச்சி பலவும் செய்தாலும்
>வழுவிப் பின்னாய் நீங்கியொரு
>வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
>அழுத கண்ணீர் ஆறெல்லாம்
>அதிலோர் எழுத்தை அழித்திடுமோ

***********************************

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது