நீ மட்டும். . .

>காற்றின் வருகையை
>களிப்புடன் தலைசிலுப்பி
>வரவேற்கிறது மரம்...

>இதழ்விரித்துப்
>புன்னகை பகிர்ந்த பூக்கள்
>தங்களை அர்ப்பணிக்கத்
>தலையாட்டி அழைக்கின்றன...

>இடியையும் மின்னலையும் அனுப்பித்
>தனது தலைநீட்டலை
மகிழ்வுடன் அறிவிக்கிறது மழை...

>இலைகளை உதிர்த்த
>கிளைகளின் முதுகில்
>மீண்டும்_
>தளிர்களைத் துளிர்த்துக்
>கொண்டாடுகிறது வசந்தம்...

>எங்கோ உதித்த சங்கீதத்தின் சிறுகீற்று
>எல்லோர் காதுகளுக்கும்
>சுகஒத்தடம் பரிமாறுகிறது...

>ஆடிக்கொண்டே போகும் ஆறு
>ஆனந்தமாகக் குதிக்கிறது
>பள்ளத்தில்... அருவியாக...

>தூறல்களின் சிலிர்ப்பில்
>தன்னிச்சையாய் முளைத்த
>காளான் குடைகளுக்கு அடியில்
>துளிகளை_
>ஆர்வமுடன் பருகுகிறது எறும்பு...
____________________________________

>அனலேந்தி
>நன்றி;http://vadakkuvaasal.com/article.php?id=51&issue=46&category=6

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது