சந்தோஷ் கவிதைகள்

உன் நினைவு !

இறந்தும் உயிரோடு
இருப்பது போல
நடிக்கிறேன்
நான் !
உயிருடன் கொல்லுவதாய்
எண்ணி
என் சவமெரிக்கிறது
உன் நினைவு !

****************************************

எப்படித் தெரியும் ?

'நவகிரகங்களை ஒன்பது
முறை சுற்றினாலே
பெரிய பலன் உண்டு,
ஏன் பதினெட்டு முறை சுத்தற ?'
குருக்கள் கேட்டபொழுது
வழிந்தேன் !
அவருக்கு எப்படி தெரியும்
நீ இன்னும் வராதது !


*****************************
மு.ரா.சந்தோஷ்

நன்றி ; தினமலர்-வாரமலர் 10-2-08

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது