மதியம் திங்கள், ஜனவரி 26, 2009

ஜோசியம்

ஜோசியம்

கிளியின்
துளிநிமிட விடுதலை,
அளிக்கப்படும் அரிசி
ஆகியன எண்ணி…
அடுக்கப்பட்டிருக்கும்
அட்டைகளிலொன்றில்
எனது மிச்ச வாழ்விற்கான
சூத்திரமிருப்பதாய் நம்புகிறேன்.

- அருண் வைத்யநாதன்

நன்றி; arunhere.com/pathivu

மதியம் ஞாயிறு, ஜனவரி 25, 2009

அரவணைப்பு -

அரவணைப்பு


**********************

கருவுக்குள் இருந்து
காளையாய் வளரும் வரை
தாயின் அரவணைப்பு.
அவளுக்கோ
இன்று முதியோர் இல்லமே அரவணைப்பு

*******************************************
கவிஞர்.கீதாலட்சுமி


நன்றி; http://tamilwriters.com/Kavithaigal/kavithaikal/Geetha5.htm

மதியம் வியாழன், ஜனவரி 22, 2009

முரண்பாடு ! ____________

முரண்பாடு
____________

>மது வாங்க 'காந்தி' உதவுகிறார்

>ஆம் !

>பண நோட்டுகளில்

>மகாத்மா படம் !

*****************************
மு.மாரிமுத்து
பாக்யா ஜூலை 18-24,1999
மறக்க முடியாத சில ‘இல்லை’கள்
______________________________

>ஆசைக்கு நிகரான நெருப்பு இல்லை

>பகைமைக்கு நிகரான பாவம் இல்லை

>நோய்க்கு நிகரான உடல் துன்பம் இல்லை

>அன்பின்மைக்கு நிகரான மனத்துன்பம் இல்லை

>துவேஷத்துக்கு நிகரான சித்திரவதை இல்லை

அன்புக்கு நிகரான இன்பம் ஏதுமில்லை

*******************************************

பகவான் புத்தர்

பலன்

பலன்

>உச்சி வெயிலில்
>தவமிருந்து
>வயதிழந்து
>இன்றுதான்
>புத்தி வந்தது
>வேலை வாய்ப்பு
>அலுவலக வாசலில்
>என் சர்பத் ஸ்டால் !
*****************************

ஆக்கம்; அண்ணா அன்பழகன்
பாக்யா 3-10 97 இதழ்

மதியம் திங்கள், ஜனவரி 19, 2009

ழ - உச்சரிப்பு !

'ழ' உச்சரிப்பு
அழகாய் வருகிறது
குடிகாரனுக்கு !


சு.கணேஷ்குமார்,வேளச்சேரி
*****************************************

பாடல் !

நாற்று நட
வயல்வெளி
இல்லையென்றாலும்
பரவாயில்லை. . . .
யாராவது பாடுங்களேன்
முழு நடவுப்பாடலொன்றை !

எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்

***************************************
புழுக்கம்

வெளியே மழை
மனதினுள் புழுக்கம்
ஐஸ் வியாபாரி !

சு.கணேஷ்குமார்,வேளச்சேரி

****************************************

வாசகர் கவிதை - குமுதம் 10-12-08

மதியம் வெள்ளி, ஜனவரி 16, 2009

குமுதம் (ஜோக்ஸ்)

உன் மார்புல ஸ்டெதாஸ்கோப்பை வச்சிப் பார்த்துட்டு

டாக்டர் என்ன சொல்றாரு ?’’

‘’சளியின் ஓசை’ ன்னாரு !’’
********************************************************************************

‘’குத்தப்பாட்டுல நடிக்க கால்ஷீட் குடுத்துட்டு இப்போ மாட்டேன்னு

சொல்றீங்களாமே….!’’

‘’பின்னே குத்துப்பாட்டுன்னு, நடுவுல மூக்கலயில்ல குத்துறாங்க…!’’

*******************************************************************************

‘’இந்த தியேட்டர் ஸ்டால்ல எதையும் வித்தியாசமா செய்வாங்களாமே !’’

‘’ஆமாம் ! குசேலன் படம் ஓடும்போது, பாப்கார்னுக்குப் பதிலா பாக்கெட்ல

அவல் விற்கப் போறாங்களாம் !’’

************************************************************************************

குட்டி மு.வெங்கடேசன்

நன்றி; குமுதம்

பெரிய வீடு ! (ஒரு பக்க சிறுகதை)

>‘’வீட்டிலே கடுமையான இட நெருக்கடி ஆயிடுச்சுப்பா’’ என்றான் தீபக்.

>‘’என் குடும்பமும் தம்பி குடும்பமும்,ரெண்டு பேரோட குழந்தைகளும்……. பெரிய வீடாப் பார்த்து மாறிடணும்பா ‘

>‘’பார்க்கலாம் ‘’ என்றார் அப்பா, அசிரத்தையாக.

>மறுநாள் சித்தப்பா குடும்பத்துடன் வந்து இறங்கியதும் ஆடிப்போனான்,தீபக். பள்ளி விடுமுறையாதலால் ஒருவாரம் தங்கப் போகிறாராம். ஏறகனவே
வீட்டில் நெருக்கடி….

>மூன்றே நாட்களில் அவன் மாமாவுரம் திருச்சியிலிருந்து குடும்பத்துடன்
வந்து நின்றார். ‘’திருப்பதி புறப்பட்டோம், வழியிலே இங்கே நாலைஞ்சு நாள்
தங்கிட்டு….’’ என்றதும் பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது தீபக்குக்கு. வீட்டில் கால் வைக்க இடமில்லை. சந்தைக்கடை மாதிரி நாள் முழுக்க இரைச்சல். விழி பிதுங்கியது.

>ஒரு வழியாக சித்தப்பாவும் மாமாவும் வெளியேறியதும் பெருமூச்சு விட்டான்.

>‘’எப்படி இருக்கு இப்போ வீடு ?’’ என்றார்,அப்பா.

>‘’அப்பாடா, நிம்மதியா இருக்கப்பா. வீடும் விசாலமாயிடுச்சு’’ என்றான்.
சித்தப்பாவும் மாமாவும் வந்துபோனதே அப்பாவின் ஏற்பாடுதான் என்பது தெரியாமல்.
***********************************************

ஆக்கம்; ஷேக் சிந்தா மதார்
குமுதம் 30-07-08

இனிப்பு கோதுமை அடை

இனிப்பு கோதுமை அடை

தேவையான பொருட்கள்:


கோதுமை மாவு: கால் கிலோ
பால்: 100 மில்லி
தேங்காய்: அரை மூடி
எண்ணெய்: 100 கிராம் ரவை: 50 கிராம்
சர்க்கரை: 150 கிராம்


செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாலை காய்ச்ச வேண்டும். அதன் பின்பு பால், சர்க்கரை, ரவை, தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் போட்டு நன்றாக பிசைய வேண்டும்.

பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை போட்டு அடையாகத் தட்ட வேண்டும். அதை சுற்றி எண்ணெயை விட வேண்டும். வெந்ததும் திருப்பிபோட்டு எடுத்தால் இனிப்பு அடை சாப்பிடத் தயார்.

____________________________

source: http://www.keetru.com/recipes/veg/sweet_wheat_adai.php

சிரிப்பூ

The teacher brings a statue of Venus into class and asks,
"What do you like best about it, class? Let's start with you, Robert."

"The artwork," says Robert.
"Very good. And you, Peter?"

"Her ****!" says Peter.

"Peter, get out! Go stand in the hall," responds the teacher
with disgust.

"And you, Johnny?"
"I'm leaving, teacher, I'm leaving..."
--------------------------------------...


"Isn't the principal a dummy!" said a boy to a girl.

"Say, do you know who I am?" asked the girl.

"No."

"I'm the principal's daughter."

"And do you know who I am?" asked the boy.

"No," she replied.

"Thank goodness!"
--------------------------------------...

Teacher: Why are you late, Joseph?

Joseph: Because of a sign down the road.

Teacher: What does a sign have to do with your being late?

Joseph: The sign said, "School Ahead, Go Slow!
--------------------------------------...

Thanks:http://www.funonthenet.in/
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது