
கல்தூண்களை துளைத்து
வெளிவரும் விழிகளுக்கு
உழுது பயிரிட்டும்
விளைநிலமாகாது
பாளம் பாளமாக வெடித்த
வெற்றிடங்களே
காணக்கிடைக்கின்றதெனினும்
அந்தியில்
பறவைகள் எப்போதும்
தம் கூடுகள் நோக்கியே
பறக்கின்றன
--------------------------------
நன்றி; http://nathiyalai.wordpress.com/பறக்கின்றன
--------------------------------