Cheapest Bike for Rs.5000 (like nano)..... !!!!!!!

Bajaj ' s new Cheapest Bike for Rs.5000 (like nano)..... !!!!!!!

It has been a major hit in the market and is largely responsible for changing the 'Two wheeler maket'


It will be introduced in Indian market in 1 st JUNE 2009 ...

I hope everyone wil come to office by bike in few days..

Facilities are..

Available in following option

a) Kick Start
b) Electric Start

1. 250 CC Speed
2. Air Conditoner System
3. break System as like Disc break in Pulsar
4. Without doubt it's going to win "Best Bike Of the Year 2009 "

Engine Specification
Engine
Air Cooled
Speed 50km /h
Front Brakes
No Need
Rear Brakes
130mm Drum
Front Tyre
2.75 X 18
Rear Tyre
100/90 X 18
Wheelbase
1265mm
Ground Clearance
155mm
Dry Weight
50 Kg
Tank Capacity
No Need
Colours
Brown



It has a admire look..


.


cid:image003.png@01C8633C.EA93EE10

மின் அஞ்சலில் பெறப்பட்டது

பாரிஜாதம்!


விண்ணிருந்து மண் வந்த மலரெனவே
மராட்டி மண்ணிருந்து இங்கு வந்த
மங்கையவள் பெயர் பாரிஜாதமாம்
பக்கத்து வீட்டின் புது வரவு


அவர் வீட்டில் பேசினால் என் வீட்டில் கேட்கும்
பல ஊர் சுற்றி வந்த எனக்கோ
பத்து மொழியில் தெரியும் ஐந்து சொற்கள்


அன்றொரு நாள் சிதறிய முத்துக்கள் எனத்
தரையதனில் தான் கிடந்த
பாரிஜாத மலரதனைப் பொறுக்கச்
சென்றேன் தோட்டத்துள் நான்


வேலியின் இரு புறமும் கண்டேன் பாரிஜாதம்
ஒரு புறம் செடி மறுபுறம் கொடி


பெயர் போன்றே வெள்ளை முகம்
சோகை பிடித்த வெள்ளை அல்ல அது
ரோஜா வண்ணம் சிறிதே கலந்த வெள்ளை
சுண்டினால் பால் தெறிக்கும் என்பது போல்


ஒரு கணம் மயங்கி நின்றேன் மங்கையவள் அழகினிலே
இரு ஜோடிக் கரு விழிகள் கூடிடவே மலர்ந்தன
மாதுளம் மொட்டென விருந்த அவள் செவ்விதழ்கள்
மலரவள் முகமதிலோர் புன் சிரிப்பு


மறு கணமோர் சிம்மக் குரல் உள்ளிருந்தே
பாரீ என்ன செய்கிறாய் பார் நீ
பனியினிலே நின்றால் சளி பிடிக்கும் உனக்கு
படுத்திடுவாய் பத்து நாள், வா உள்ளே என்றே

மானெனத் துள்ளியே பாய்ந்தது உள்ளே
பாரிஜாதமெனும் அப் பச்சிளம் குழந்தையுந்தான்
-------------------------------------------------------------
posted by நடராஜன் கல்பட்டு
Thanks: http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0904nkn_flower.php


நகைச்சுவை-(ஆனந்த விகடன்)

பி.ச.குப்புசாமி கவிதைகள்:

பி.ச.குப்புசாமி கவிதைகள்

சந்திரிகை:

இந்த முகம் அன்றொருநாள்
......என்னருகே வந்தமுகம்
மந்தநகை யோடென்றன்
......மார்பினில்பு தைந்தமுகம் !

இந்த முகம் நான்சொன்ன
......இன்மொழிகள் கேட்டமுகம்
சிந்தனைகள் பிறிதின்றிச்
......சிரித்தருகி ருந்தமுகம் !

இந்தமுகம் காதலெனும்
.....எழில் வானம் கண்டமுகம்
நொந்தமனம் அன்றாடம்
......நூறுதரம் எண்ணும்முகம் !

இந்தமுகம் பேரன்பின்
......இன்பங்கள் கொண்டமுகம்
முந்தியரு நாளென்னை
......முத்தங்கள் இட்டமுகம் !

இந்தமுகம் பிரிவாகி
......எனைவிட்டுச் சென்றமுகம்
விந்தைமுகம் காலத்தை
......வென்றுதினம் நின்றமுகம் !

* * *
வான்விளிம்பில் சந்திரிகை
......வந்தொளிசெய் கின்றாள்
நான்விரும்பும் முகமொன்றை
......நனவிற்கொணர்கின்றாள்

*****************************
காலடிகள்:

காலமெனும் பெரும்பரப்பில்
......காதல்மகள் நடக்கின்றாள்
கோலமெலாம் தனதாகக்
......கொண்டமகள் நடக்கின்றாள்!

ஞாலமெனும் பெரும்பரப்பில்
......ஞானமகள் நடக்கின்றாள்
மூலமெனும் பொருளறிய
......முனைந்தமகள் நடக்கின்றாள்!

அளவில்லாப் பெரும்பரப்பில்
......ஆசைமகள் நடக்கின்றாள்
வளர்கின்ற துன்பமெலாம்
......மறந்தமகள் நடக்கின்றாள்!

உள்ளமெனும் பெரும்பரப்பில்
......உணர்வுமகள் நடக்கின்றாள்
வெள்ளமெனப் பிரவாகம்
......விந்தைமகள் நடக்கின்றாள்!

விதியென்னும் பெரும்பரப்பில்
......விட்டமகள் நடக்கின்றாள்
எதிர்காலம் குறிக்கோளாய்
......இந்தமகள் நடக்கின்றாள்!

* * *
நடந்துசெல்லும் மகளிர்தம்
......நடையழகே என்வாழ்க்கை
கடந்து செலும் அவர்தமது
.....காலடிகள் என்கவிதை!

***************************
பொய்...பொய்...பொய்:

நின்றதுபொய் பார்த்ததுபொய் நெஞ்சைமெலத் தொட்டுவிட்டுச்
சென்றதுபொய் ஆனால் செகமும்பொய் - இன்றுமுதல்
தெய்வமும் பொய்யாம் தெரிந்துகொண் டேனெல்லாம்
பொய்யிலும் பொய்யாகும் போ!

சொன்னவை பொய்உன் சுடர்விழி வீசிய
மின்னலும் பொய்உன்றன் மென்னடை - இன்முகம்
கன்னிகை நாணம் கருத்தை அறிவித்த
புன்னகை யாவுமே பொய்!

வாழ்வுபொய் நீயதில் வந்ததுபொய் நம்பிய
ஊழ்வினைப் புண்ணியம் ஓர்பொய்யே - ஏழேழ்
பிறவிக்கும் பற்றாகும் பேரன் பெனும்சொல்
வெறும்பொய்யே அன்றிவேறு என் ?

---------------------------------------------------------

நன்றி: பல பத்து ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகளில் பிரசுரமான இக்கவிதைகளைப் பத்திரமாய் வைத்திருந்து தந்துதவிய சபா என்கிற வே.சபாநாயகம் அவர்களுக்கு.

Thanks: http://tamil-lit.blogdrive.com

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்:

இருமை:

நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.

ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடிகோடி சூரியன் வைத்தார்.

இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இருவேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.

நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.

காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.

*******************************
வாழ்வின் கவிதை:

நீர்க்கரையின் கோரையிடை பாம்பின் கண்கள்.
புல்பூத்த தட்டானில் மயங்கும் தவளை.
துருதுருத்து மோந்தபடி கீரிப்பிள்ளை.
பசுமை இனிக்க மான் கிழை
வரும் தடத்தில் விரிகிறது மனிதன் கண்ணி.
அச்சத்தில் சாகாதவை வாழ்கிறது
இக்கணம்.
என்றும்போல் மருதமரம் செழிக்க ஊட்டியும்
வேர் அறுத்தும் நகர்கிறது பாலி ஆறு.

டைட்டானிக் கனவு மனிதா
உன் விஞ்ஞான வரைபடத்தில்
ஏது மிதக்கும் பனிப்பாறை.
எனினும் உன்னால் இயலுமே
முழ்கையிலும் வயலின் மீட்டி
சாவையும் வாழ்தல்.
ஞான் அறியும்
நஞ்சு பருக விதித்த பின்னும்
வாழ்ந்த ஒரு கிரேக்கத்து மனிதன் காதை.

இலக்கமில்லா வாகனம் ஊரும்
எதிரிகளின் துப்பாக்கி சுட்டும் போதும்
நண்பரது கொலைக்கரத்தால் விலங்கு பூண்டு
நாள் நேரம் காத்திருந்த வேளையிலும்
வாழும் ஆசை புதுவெள்ளமாய் பெருக
ஜீவநதியாய் இருந்தேன் என்பதன்றி
பெருங்கவிதை
என் வாழ்வில் வேறு ஏது.

கையில் கறையாக
பெண்கள் சிலரது கண்ணீர் மட்டுமே
மனிதம் இழிந்து ஆண்மையாவதில்
பெருமைப்பட்ட
என் கவிதை சாயம்போன
அந்த நாட்களை வெறுக்கிறேன்.
ஆணை/பெண்ணை தாண்டி
மனிதம் அடைதலே விடுதலை.
கைகொடுக்கிற தோழி/தோழரால்
மீட்கப்படுகிறதே பாக்கியம்.

மோசமான கவிதைகள் எழுதியுள்ளேன்
ஆனால் எப்போதும் வாழ்ந்தேன்
நல்ல கவிதையாய்.
போர்க்களம் என்மீது இறங்கியபோதும்
சிங்களத்து தோழரை தோழியரை
முஸ்லிம் சகோதரரை சகோதரியைக் கேளுங்கள்.
எப்பொழுதும் மனிதனாகவே முயன்றேன்
அதுவே நான் எழுதிய நல்ல கவிதை.

தலை பணியாது
வாழும் ஆசையை இறுகப் பற்றுதலே
எனது கவிதை.

*********************************
இல்லறம்:

ஆற்றங்கரையில்
இன்னமும் தோற்றுப் போகாத மரம் நன்.

இன்று தெளிந்து போய்
புல்லும் சிலம்பாமல் நடக்கிறது காட்டாறு.
விடியலில் இருந்தே ஒளியைக் கசக்கி
ஹோலிப் பண்டிகைக் குறும்போடு
வண்ணங்கள் வீசி
தொட்டு தொட்டுச் செல்கிறது அது
நேற்று வெறி கொண்டாடியது தானல்ல என்பதுபோல.

எனது கன்றுகள்
முளைத்தெழுகிற நாள்வரையேனும்
கைவிட்டகலும் வேர்மண் பற்றி
பிழைத்திருக்கிற போராட்டத்தில்
நேற்று அடைந்த விரக்தியை மறந்தேன்
அது நானல்ல என்பது போல.

நேற்றைய துன்பமும் உண்மை.
நாளைய பயமோ அதனினும் உண்மை
எனினும் இன்றில் மொட்டவிழ்கிறதே வாழ்வு
சிறகசைக்கிறதே வண்ணத்துப் பூச்சிகள்
துள்ளி மகிழுதே பொன்மீன்கள்

நமது அன்றாட மறதிக்குப் பரிசுதானே
இந்த நட்பும் வாழ்வும்.

நன்றி: வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள் (பெருந்தொகை) - வ.ஐ.ச.ஜெயபாலன் - ஸ்நேகா வெளியீடு, சென்னை - 14 - விலை ரூபாய் 150.

Thanks: http://tamil-lit.blogdrive.com


'திருமண' பாடல்கள்

1. 'Aanandham aanandham aanandhamE' :
Usually sung immediately ater 'ketti mELam' ! ( after the knot is tied)

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே

ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனாரே
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே
வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்
சீதைக்கும் ராமனுக்கும் ஆனந்தம்
நாம் செய்த பூஜா பலமும்
இன்று பலித்ததம்மா - ஆனந்தம்

2. 'Gowri kalyaana vaibOgamE' :
Generic all-purpose song, usually sung at the time of 'aarathi'.

கெளரி கல்யாண வைபோகமே


விருத்தம்
-----------
க்ஷேமங்கள் கோரி வினாயகனைத் துதித்து
ஷங்கரனையும் கெளரியையும் வர்ணித்து
ஸ்ரீராமனையும் ஜானகியையும் வர்ணித்து

பல்லவி
--------
கெளரி கல்யாண வைபோகமே
லக்ஷ்மி கல்யாண வைபோகமே (2)

சரணம்
--------
வசுதேவ தவ பாலா
அசுர குல காலா
சசிவதன ரூபிணி
சத்யபாம லோலா - கெளரி கல்யாண

கொத்தோட வாழை மரம்
கொண்டு வந்து நிறுத்தி
கோப்புடைய பந்தலுக்கு
மேல் கட்டு கட்டி - கெளரி கல்யாண

3. 'Maalai saarthinaaL' :
On the day of the marriage, the bride and the groom sit on the shoulders of their uncles and exchange garlands. This song is appropriate for that time (but there will be so much excitement and commotion at that time, nobody would listen to you even if you sing :-) This event brings out the best laughter out of all events of marriage.

மாலை சார்த்தினாள்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன்
மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள்
மாமலர் கரத்தினால் - மாலை சார்த்தினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள்
பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய்
ஆண்டாள் கரத்தினால்

மாலை சார்த்தினாள் கோதை
மாலை மாற்றினாள், பூ - மாலை சார்த்தினாள்

4. Here are a set of 'oonjal' (swing) songs.

4.1 'kannoonjal'
கன்னூஞ்சல்

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள்
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்

பொன்னூஞ்சலில் பூரித்து பூஷனங்கள் தரித்து
ஈஸ்வரனாரிடத்தில் ஆசைகள் ரொம்ப வைத்து
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

உத்த பெற்ற குமாரி நித்ய சர்வாலங்காரி
பக்தர்கள் பாப சமாரி பத்ம முக ஒய்யாரி
கன்னூஞ்சல் ஆடி இருந்தாள் ...

அசைந்து சங்கிலியாடி உசந்து ஊர்வசி பாட
இசைந்து தாளங்கள் போட மீனாக்ஷி பரியாள் கொண்டாட

கன்னூஞ்சல் ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனமகிழ்ந்தாள் - கன்னூஞ்சல்

4.2 'ratha oonjal' - another oonjal song

ரத்ன ஊஞ்சல்

ரத்ன ஊஞ்சலில் ஆடினாள் பத்மாசுதனை பாடினாள்
முத்து சரங்கள் குலுங்கிட ரத்ன மாலை அசைந்திட
சுற்றிலும் சகிகள் விளங்கிட மெத்தவும் மதுராம்பிகே - ரத்ன

மதிமுகம் மந்தகாசமாய் மன்னனிடத்தில் நேசமாய்
பாஸ்கரன் புகழ் ப்ரகாசமாய் பரதேவதை உல்லாசமாய் - ரத்ன

4.3 'Aadir oonjal' - another oonjal song
ஆடிர் ஊஞ்சல்


விந்தை நிறை செம்பவள கால்கள் நாட்டி
விளங்கும் உயர் மரகதத்தால் கொடுங்கைப் பூட்டி
அந்தமுள்ள நவரத்ன ஊஞ்சல் மீதே
அபிமனுடன் வத்சலையும் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்

இந்திரையும் சசியும் ஒரு வடம் தொட்டாட்ட
சந்த்ரசேகரனும் உமையும் ஒருவடம் தொட்டாட்ட
தும்புரு நாரதரும் வீணை மீட்ட
ஸ்ரீரங்க நாதருடன் ஆடிர் ஊஞ்சல்
ஆடிர் ஊஞ்சல்

4.4 'laali' - another oonjal song

லாலி


தந்தி முகனுக்கிளைய கந்தனுக்கும் லாலி
சதுர் மறை மூலனுக்கும் மேயனுக்கும் லாலி

ஆடிபூர துதித்த ஆண்டாள் நம் கோதை
அணியரங்கருடன் ஊஞ்சல் ஆடினாள் இப்போதே
லாலி...

பாலாலே கால் அலம்பி பட்டாலே துடைத்து
மணி தேங்காய் கையில் கொடுத்து
மஞ்சள் நீர் சுழற்று
லாலி...



--------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------

5. Here are some 'nalangu' songs...
5.1 nalangkita vaarum raajaa
நலங்கிட வாரும் ராஜா

நலங்கிட வாரும் ராஜா நாணயம் உள்ள துரையே
முத்திழைத்த பந்தலிலே ரத்ன கோபமாட்டிருக்கு
வந்த ஜனம் காத்திருக்க வாரும் அய்யா நலங்கிடவே - நலங்கிட

பட்டு ஜாம காளமெத்தை பந்தலிலே விரித்திருக்கு
நாலு விதவாத்யங்களும் நாகரிகமாய் ஒலிக்க - நலங்கிட

எந்த ஊரு எந்த தேசம் எங்கிருந்து இங்கு வந்தீர்
மோகன புரம் தனிலே மோகினியைக் காண வந்தேன் - நலங்கிட

5.2 'nalangidugiraaL meenalocahni' - another nalangu song !

நலங்கிடுகிறாள் மீனலோசனி

நலங்கிடுகிறாள் மீனலோசனி
நாதருடன் கூடி
நலங்கிடுகிறாள் மீனலோசனி

நாரதரும் வந்து கானங்களை பாட
நானாவித தாளங்கள் போட - நலங்கிடுகிறாள்

சொர்ண தாம்பாளத்தை ஜோதியால் எடுத்து
சுந்தரேசர் கையில் கொடுத்து
பூபதி பாதத்தில் விழுந்து
புஷ்ப மாலைகளை அன்புடன் சார்த்தி - நலங்கிடுகிறாள்

சொர்ண பன்னீர் சொம்பை ஜோதியால் எடுத்தாள்
சுந்தரேசர் மேலே தெளித்தாள்
வாசனை கந்தம் பரிமளம் பூசினாள்
வணங்கி சாமரம் வீசினாள் - நலங்கிடுகிறாள்

6. This one is a 'kalyaana samayal saadham' kind of paattu.
'bOjanam seyya vaarungO' :

போஜனம் செய்ய வாருங்கோ

போஜனம் செய்ய வாருங்கோ ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்த்ரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ

சித்ரமான நவ சித்ரமான்
கல்யாண மண்டபத்தில்
வித விதமாகவே வாழைகள் கட்டி
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
மாட்டிய கூடமும் பவள ஸ்தம்பமும்
பச்சை மரகதங்கள் தளகதி செய்களும்
முத்து முத்தாகவே நுனி வாழைகளும்
பசும்பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
பன்னீர் ஜலத்துடன் உத்திரணியுமே
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க - போஜனம்

மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட
அன்னம்பார்வதி ஆதிபராசக்தி
அருந்ததி இந்த்ராணி அகல்யா கெளசல்யா
த்ரெளபதி சீதா தாரா மண்டோதரி
இந்திரதேவி ரம்பை திலோத்தமை
கந்தர்வ பத்தினி கின்னர தேவி
அஷ்டதிக் பாலர்கள் பார்யாளுடனே
சத்வ மஹாமுனி ரிஷிபத்னிகளும்
பந்தடித்தாற் போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டுகள் கல்லு கல்லுவென
பசும்பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து
பரிந்து பரிந்து பரிமாரிட வந்தார் - போஜனம்

7. Here are two general purpose songs...
7.1 'Sri raamaa jeya jeya'

ஸ்ரீராமா ஜெய ஜெய


ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய

தில்லையில் வனம் தனிலே
ராமர் வந்த நாளையிலே
ராமரோட சேனையெல்லாம்
ராமரை கொண்டாட

சங்கு சக்ரம் தரித்து கொண்டு
தனுசைக் கையில் பிடித்துக் கொண்டு
கோதண்டம் தனைப் பிடித்து ராமர்
கோலாகலமாய் இருந்தார்

ஜனகரோட மனையில் வந்து
சீதையுடைய வில்லை முறித்து
ஜானகியை மாலையிட்டார்
ஜனகர் அரண்மனைதனிலே

ஸ்ரீராமா ஜெய ஜெய
சீதம்மா மனோகர
காருண்ய ஜலதே
கருணாநிதே ஜெய ஜெய

7.2 'manmadhanukku maalai ittaayE'
மன்மதனுக்கு மாலையிட்டாயே

மன்மதனுக்கு மாலையிட்டாயே
மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
அடி மாதே மன்மதனுக்கு மாலையிட்டாயே
ஜன்மம் அதில் சுகித்து நீராடி - மன்மதனுக்கு

மன்மதனுக்கு மாலையிட்டு
மாலைதனை கைபிடித்து
கனகநோன்பு நோற்றதுபோல்
கிடைத்தது பாக்யமடி - மன்மதனுக்கு

செந்தாழை ஓடையிலே
மந்தாரை பூத்ததுபோல்
இந்திரனோ சந்திரனோ
சுந்தரனோ இவர்தானடி - மன்மதனுக்கு
----------------------------------------------------
நன்றி;
http://sapthaswaras.blogspot.com

கடல் அலைகள் - புகைப்படங்கள்

From Fwd mail
_________________________________

These incredible images of waves were taken by the number 1 photographer of surf: Clark Little. He has dedicated his life to photographing the waves and has published a selection of the best images of his career. He captures magical moments inside the "tube", as surfers say.



cid:image001.jpg@01C9C59D.122790D0


Sun ... glints off wave
Clark Little/SWNS





cid:image002.jpg@01C9C59D.122790D0


Sand ... in surf
Clark Little/SWNS





cid:image003.jpg@01C9C59D.122790D0


Tubular ... shining
Clark Little/SWNS





cid:image004.jpg@01C9C59D.122790D0


Beach ... surf crashes down
Clark Little/SWNS





cid:image005.jpg@01C9C59D.122790D0


Molten ... liquid gold
Clark Little/SWNS





cid:image006.jpg@01C9C59D.122790D0


White ... tumultuous water





cid:image007.jpg@01C9C59D.122790D0


Splash ... stunning shot
Clark Little/SWNS





cid:image008.jpg@01C9C59D.122790D0


Red ... mysterious shot
Clark Little/SWNS





cid:image009.jpg@01C9C59D.122790D0


Break ... wave crashes down
Clark Little/SWNS





cid:image010.jpg@01C9C59D.122790D0







 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது