கிச்சன் மருந்து

படத்தின்மீது கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.
நன்றி; குங்குமம்

நானும் வர்றேன்!

மரப் பொந்தில் எலி ஒன்று வசித்து வந்தது. அந்த எலியானது தினமும் இரவு நேரத்தில் இரைத் தேடச் செல்லும். இரவெல்லாம் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று கிடைக்கும் இரையை உண்டு விட்டு பின்னர் மறுநாள் அதிகாலை நேரத்தில் தன்னுடைய இருப்பிடத்தை வந்தடைந்துவிடும்.


ஒரு நாள் அதிகாலை நேரத்தில் அந்தப் பக்கமாக நரி ஒன்று வந்தது. அது மரப் பொந்தின் உள்ளே செல்கின்ற எலியைப் பார்த்துவிட்டது.


"எலியே! எலியே!'' என்று பொந்தில் வெளியே நின்றபடி அழைத்த

"நரியே! நரியே! என்னை எதற்காக அழைத்தாய்?'' என்று கேட்டது எலி.


"எலியே! உன்னைப் பார்க்கையில் நீ இரவெல்லாம் கிராமத்து பக்கம் சென்று இரைத்தேடி விட்டு அதிகாலை நேரத்தில் உனது இருப்பிடத்திற்கு வருவாய் என்று தோன்றுகிறது. இனிமேல் நீ கிராமத்துப் பக்கம் செல்லும் நேரம் என்னையும் உன்னோடு அழைத்துச் செல். நீ கிராமத்து வீடுகளில் உள்ளே சென்று இரைத் தேடிக் கொள். நான் வெளியே இருக்கின்ற இரையைத் தேடிக் கொள்கிறேன்,'' என்றது நரி.


"நரியே! உனக்கும், எனக்கும் எந்தப் பொறுத்தமும் இல்லை. நானோ சிறு விலங்கு. சந்து, பொந்து எதுவாக இருந்தாலும் அதில் நுழைந்து சென்று விடுவேன். எனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஏதாவது சிறிய இடத்தினுள் புகுந்து உயிர் பிழைத்துக் கொள்வேன். ஆனால், நீ அப்படியில்லை. நீ கிராமத்து மனிதர்கள் யார் வசமாவது சிக்கிக் கொண்டால் அவர்கள் உன்னை நையப் புடைத்து விடுவர். அதனால் உனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம். அதனால் நீ என்னோடு வரலாம் என்கிற எண்ணத்தை மாற்றிக் கொள்,'' என்றது எலி.


"எலியே! நீ தயவு செய்து எனது விருப்பத்தை ஏற்றுக் கொள்! எனக்கு கிராமத்தில் சென்று இரைத் தேடவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் ஆடுகளையும், கோழிகளையும் அடித்து சாப்பிட வேண்டுமென்று மிகவும் ஆசைப்படுகிறேன். எனவே, என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீ எனக்கொரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தால் அதனை நான் என்றுமே மறக்கமாட்டேன்,'' என்றது நரி.


"சரி நரியே! நீ என்னோடு வரவேண்டுமென பிடிவாதமாக இருக்கிறாய்! உன்னுடைய பிடிவாதத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். எனவே, இன்று இரவு நீ இங்கே வந்துவிடு. நான் முன்னே செல்ல நீ என்னைப் பின் தொடர்ந்து வா!'' என்றது எலி.


"ஆஹா! எலியே! இதைக் கேட்கிற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. எனவே, நான் இரவு கண்டிப்பாக வந்துவிடுவேன். நீ என்னை மறக்காமல் மறுக்காமல் உன்னோடு அழைத்துச் செல்,'' என்றது நரி. அன்றைய இரவு சரியான நேரத்தில் நரி வந்தது. எலியும் வெளியே புறப்படுவதற்கு தயாராக இருந்தது.


"நரியே! நீ தெரிவித்தபடியே சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய். இப்போதே நாம் இருவரும் புறப்படலாம்,'' என்றது எலி.
எலி ஓர் கிராமத்தை வந்தடைந்தது. ""நரியே நான் வீட்டின் உள்ளே புகுந்து எனக்கு கிடைக்கும் இரையை சாப்பிடுகிறேன். நீ வீட்டின் வெளியே என்னென்ன இரை கிடைக்கின்றதோ அதனையெல்லாம் சாப்பிடு,'' என்று கூறியபடி வீட்டின் உள்ளேப் புகுந்து கொண்டது எலி.


நரியோ மகிழ்ச்சியோடு வீட்டுக் காம்பவுண்டின் உள்ளே சென்றது. அங்கே ஒரு கோழிக் கூண்டு காணப்பட்டது. நரி அந்தக் கோழிக் கூண்டின் உள்ளே புகுந்து கோழிகளைப் பிடித்தது. அதனைக் கண்டதும் கோழிகள் எல்லாம் கொக்... கொக்... என்று கூக்குரல் எழுப்பின. அந்த நேரம் வீட்டுக் காவலுக்குப் படுத்திருந்த நாயானது கண் விழித்துக் கொண்டது. உடனே அது சப்தமாக லொள்... லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எல்லா நாய்களுமே லொள்... லொள்... என்று குரைக்கத் தொடங்கின.


நாய்களின் குரைப்பு சப்தம் கேட்டதும் கிராமத்தினர் அனைவரும் விழித்துக் கொண்டனர். கிராமத்திற்குள் திருடன் யாராவது நுழைந்திருக்க வேண்டும். அதனால்தான் நாய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார் போல் குரைக்கின்றன என்று நினைத்தனர். உடனே அவர்கள் கையில் தடியுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.


திபுதிபுவென்று மக்கள் எல்லாரும் வீட்டை விட்டு வெளியே வருவதைக் கண்டதும் நரி திடுக்கிட்டது. அதனால் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. "இவர்களிடம் நாம் மாட்டிக் கொண்டால் நம்மை அடித்தே கொன்று விடுவர்' என்று மனதுள் எண்ணிய நரியானது தாமதிக்காமல் கூட்டத்தின் உள்ளே புகுந்தபடி ஓட்டமெடுத்தது.


கிராம மக்கள் நரியைக் கண்டு திடுக்கிட்டனர். "இந்த நரியைப் பார்த்து தான் நாய்கள் எல்லாம் குரைத்திருக்க வேண்டும். கிராமத்திற்குள் நுழைந்து திருட வந்த இந்த நரியினை நாம் சும்மா விடக்கூடாது' என்று முடிவு செய்தனர்.
மின்னல் வேகத்தில் தங்கள் கைகளில் தடியினை ஏந்தி நரியைத் துரத்தினர். ஓடியபடியே பின்னால் திரும்பிப் பார்த்த நரியோ மேலும் திடுக்கிட்டது.


"தம்' பிடித்துக் கொண்டு இன்னும் வேகமாக ஓட முயற்சித்தது. மின்னல் வேகத்தில் அந்த கிராமத்தை விட்டு ஓடி மறைந்தது நரி.
எலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு கிடைத்த இரையை எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் தன் பொந்தை வந்தடைந்தது.


அங்கே எலியின் வருகைக்காக நரி காத்துக் கொண்டிருந்தது. ""எலியே! நீ சொன்னது உண்மைதான். நான் ஆபத்தை சந்தித்து விட்டேன். நான் உயிர் பிழைத்ததைப் பெரிதாக நினைக்கிறேன். இனிமேல் ஒருபோதும் இப்படி முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடமாட்டேன்,'' என்றது நரி.


"நரியே! நான் கிராமத்திற்குச் சென்று இரைத்தேடி உண்பதுபோல் நீயும் உண்ண வேண்டுமென்று ஆசைப் பட்டாய்! அதன் விளைவை நீயே உணர்ந்து கொண்டாய்! எப்போதுமே பிறர் வாழ்க்கையைப் பார்த்து ஆசைப்பட்டால் இந்த மாதிரி துன்பங்களைத் தான் நாம் அனுபவிக்க வேண்டும்,'' என்றது எலி.


நரியும் எலியின் கருத்தினை ஏற்றுக் கொண்டது.


நீதி: குட்டீஸ்... அவங்க அவ்ளோ வசதியா இருக்காங்க. இவங்க இவ்ளோ வசதியா இருக்காங்க என்று சொல்லி மற்றவர் வாழ்க்கையை பார்த்து ஆசைப்படாதீர்கள். உங்களுக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தியடையுங்கள் !.

http://www.dinamalar.com/siruvarmalar/smrmay_1605/sirukathai.asp






மிருகங்களிடமிருந்து பயில வேண்டிய பாடம்

மிருகங்களிடம் குணம் உண்டு. ஒன்று எதிர்த்துத் தாக்கும் அல்லது ஓடிவிடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்து கொண்டு அஞ்சி விழிக்காது. தாக்குதலில் இறங்குவது என்று முடிவு செய்துவிட்டால் தன் உயிர் போகும் வரையில் தன் துணிவைக் கைவிடாது.

உதாரணமாகப் பூனையை எடுத்துக் கொள்வோம்.

பூனை, திறந்த வெளியில் நம்மைக் கண்டால் ஓடிவிடும். சாதாரணச் சைகையாலேயே அதை ஓட்டிவிடலாம். இதை வைத்துப் பலர் பூனையைப் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதாவது பூனை ஒரு சாதுவான பிராணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல.

தோற்றத்தால் அது எளிமை வாய்ந்த பிராணியாக இருக்கலாம்.

ஆனால், அதன் மனம் மிக உறுதி வாய்ந்தது.

‘பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி’ என்ற பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

போலித்தனமான குணங்களைத் தன்னகத்தே அடக்கிக்கொண்டு லஞ்சம் தீர்க்கும் மனிதர்களை இந்தப் பழமொழியால் குறிப்பிடுவதுண்டு.

ஆனால், இந்தப் பழமொழி முக்கியமாகப் பூனையின் இயல்பையும் குறிக்கின்றது என்று அறியமாட்டார்கள்.

பூனை, பார்ப்பதற்குத்தான் பூனை. ஆனால், அது பாயத் தொடங்கிவிட்டால் செயலில் புலியைப்போல் இயங்கும்.

அதாவது, ஒரு பூனையைத் தனி அறையில் அடைத்துவிட்டு, ஒரு மனிதன் அந்த அறையில் தடி ஒன்றுடன் நுழைந்துவிட்டான் என்றால், அப்போதுதான் அவனால் பூனையின் இயல்பை உணர முடியும்.

பூனை அந்த அறையினுள் கொடிய விலங்காகிவிடும். அடிபட்டுச் செத்துப் போவது உறுதி என்றாலும் நமக்கிருக்கும் ஒரே வழி துணிந்து இந்த மனிதனுடன் போராடுவதுதான் என்ற முடிவுக்கு அது வந்துவிடும்.

மனிதன் வெல்வானா பூனை வெல்லுமா என்பதல்ல பிரச்னை. ஆனால், இந்தப் பூனையின் இயல்பிலே மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய ஒர் உண்மை இருக்கிறது. எந்தச் செயலிலும் வேறு வழியே இல்லையென்றால் துணிந்துவிட வேண்டியதுதான். துணிவு ஒன்றுதான் நம்மைக் காப்பாற்றும். ஆனால் அந்தத் துணிவு முன்னர் குறிப்பிட்டதுபோல் அறிவு

நன்றி; http://www.tamilvanan.com/

ஸ்ரேயா- கட்டுடல் ரகஸியம் !


ஸ்ரேயாவின் இளமையான உடற்கட்டு ரகசியம் என்ன தெரியுமா? சூட்டிங்கிற்கு கிளம்புவதற்கு ன் தியானம், யோகா என ஒரு மணி நேரம் உடலையும், உள்ளத்தையும் அதிகாலை நேரத்திலேயே வறுத்தி எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இதுதான் தனது இளமை மற்றும் உடற்கட்டு ரகசியம் என்று கூறவும் தயங்குவதில்லை அம்மணி.
நன்றி; தினமலர்

மகிழ்ச்சியில் தமன்னா !

சூர்யா ஜோடியாக அயன் மற்றும்

ஆனந்த தாண்டவனம் என இரு படங்கள்

ரிலீசான மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா.

சிரிப்பின் பயன்கள்


ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.

· உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும். இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.

· சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாய்வு நன்கு உட்சென்று உடலுக்கு புத்துணர்வைத் தரும்.

· சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.

· ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.

· சிந்தனை, செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.

ரத்த அழுத்தத்துக்கு மொச்சை கொட்டை சிறந்த மருந்து!

உயர் ரத்த அழுத்தம் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள். தினமும் ஒரு சில மொச்சைக் கொட்டைகளை சாப்பிட்டால் போதும். ரத்த அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உள்ள இஸ்ரேல் டியோகோன்ஸ் மருத்துவ மையத்தில் நடந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.


நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை அதிகமாக உள்ளது. குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிறது. சிலருக்கு, "ஹைப்பர் டென்ஷன்' எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இது மிக ஆபத்தானது.

இப்படிப்பட்டவர்களில் 48 பேரை தேர்வு செய்து, அவர் களின் உணவு பழக்க வழக் கங்கள் மாற்றப்பட்டன. தினமும் அவர்களுக்கு மொச்சைக் கொட்டை வழங்கப் பட்டது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் அவர்களில் 40 பேருக்கு ரத்த அழுத்தம் சகஜ நிலைக்கு வந்தது. வேர்க்கடலை, சிப்ஸ் போன்று சிறிய பாக்கெட்களில் மொச்சை கொட்டையும் விற்கப் படுகிறது. தினமும் அரை கப் மொச்சை கொட்டையை சாப் பிட்டு வந்தால் போதும். உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடும் என்று இந்த மருத்துவ மைய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

-----------------

நன்றி; தினமலர்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது