பிறந்த பயன்!

இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!

வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!

கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்

- யாரோ

எது அழகு?

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே அழகு என்றாராம்”.

-----------

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திட வாழ்த்துக்களோடு,
கொல்லி மலை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்

வீடு

பொணம்
தொங்கிய வீடுன்னு
இனி பொறக்கப் போற
கொழந்த கூட
சொல்லக்கூடாதுன்னு

கொல்லப்புறத்துல
இருக்கற வேப்பமர
கிளையைப் பார்த்தா

அதுவும் சிட்டுக்குருவிக்கு
வீடாய் போக
எனக்குள்ள தூக்குப
போடற புத்தி

உசுரோட செத்துப்
போச்சு. . .
-------------------------
>வஸந்த் பூபதி
நன்றி; குமுதம் 13-2-08

குழந்தை!

குழந்தை

இன்று பிறந்த நாள்

கொண்டாடும்

குழந்தை உணருமா?

இந்த நாளில்

ஏற்பட்ட தாயின்

பிரசவ வலிகளை…

--
>வஸந்த் பூபதி
நன்றி; குமுதம் 13-2-08

குரங்கு விடு தூது!

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த
குருவுக்கு ஏற்பட்டது.

"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப்
பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக்
கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான்,
முட்டாள் சீடன்

பிள்ளையாரைப் பிடிக்க, குரங்காக ஆகி விடும் என்பதால்,
அரச மரத்தினடியில் இருந்த பிள்ளையார் சிலை மேல்
விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

குரங்காட்டியிடமிருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று யதேச்சையாக
அங்கே வந்தது. சீடர்கள் அதனைப் பிடித்து சென்றனர்.


"நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால்
அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை.
அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு
வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.

"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான
சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை
ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது. ஒரு மணி
நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு
கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன. வாணக் கடைக்குச்
சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று
நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.
அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை
சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.

"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான்,
முட்டாள்.

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம்
குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான்.
நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல
நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான்
மண்டு. பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன்,
"நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து
இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த
சாதி சுருட்டு" என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக்
கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு
வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர்

சீடர்கள்.
அடுத்த கணம், 'டமால், டுமீல்' என்று ஒவ்வொருவர் வாயிலும்
இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக்
கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத்
தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று
எச்சரிக்கை செய்தார்.

source: http://hayyram.blogspot.com/2009/03/blog-post_2067.html

யாருக்கு 'பவர்' அதிகம் ?

ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு இருக்கை
போடப்பட்டிருக்கும் . அதில் ஒரு அப்பாவி கணவன்
இருப்பான். அந்த சேருக்கு என்ன பெயர்?

''புருசன் சேர்!''

-------------------------------------------------------------------------------
யாருக்கு 'பவர்' அதிகம் ? ஆணுக்கா இல்லை பெண்ணுக்கா?

பெண்ணுக்குத்தான்!

செஸ்ஸிஸ் கூட பெண்ணுக்குத்தான் (ராணி) பவர் அதிகம்!
ஆணுக்கு பவர் கம்மிதான்!

__________________________________________________


கல்யாணம் முடிந்த முதலாண்டில் மனைவியின் பேச்சை
கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்

மூன்றாம் ஆண்டில் இருவரின் பேச்சையும் பக்கத்து வீட்டுக்காரர்கள்
கேட்பார்கள்!

------------------------------------------------------------------------------------------

நான் என் கணவனிடம் ரொம்ப நாளா நான் போகாத
இடத்திற்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றேன்.
அவரும் சரி கண்டிப்பா அழைத்துச்செல்கிறேன்
என்று கூறினார் நான் எங்கே என்று கேட்டேன் *

அவரோ சமையலறைக்குத்தான் என கூறி ''பின்ன நீ
ரொம்ப நாளா போகாத இடம் அதுதானே என்றார்''!

_-----------------------------------------------------------------------------------

கடி ஜோக்ஸ்

ரயில் வரும் போது ஏன் கேட்டை மூடுகிறார்கள் ?

"ஊருக்குள் வராதே அப்படியே போ" என்றுதான் கேட்டை மூடுகிறார்களாம்!

-----------------------------------------------------------------------

மாதவன் மரத்திலிருந்து விழுந்தான்." என்ன காலம்...?

கஷ்ட காலம்!

______________________________________________

குத்தியவுடன் ஏன் ரத்தம் வருது?

குத்தியவர் யார் என்று பார்ப்பதற்காக தான்...!

-------------------------------------------------------------------------

காகம் எதற்காக தண்ணீரில் மூழ்குவதில்லை???

தண்ணீர் குடிக்க காகம் முங்குவது கிடையாது காரணம் அதன் மூதாதையர்கள்
கற்களை போட்டு எப்படி தண்ணீர் குடிப்பது என்று சொல்லிக் கொடுத்துள்ளார்கள்!.
.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது