வலியிழந்தவள்

அடி,மிதி,உதை
அஞ்சமாட்டேன்.
போதையில் நீ இருக்கையில்
ரசத்தில் துளி விஷம்
சேர்த்துவிடவோ,
ரயிலேறி நீ தொட முடியா தூரம்
போய்விடவோ.

ஆனால்,
நீயெனக்குச் செய்யும்
சித்ரவதைகள்
உதவியாயிருக்கும்,
என்க்கும் என் பிள்ளைக்கும்
திரும்ப நீ தேவையென்ற உணர்வு
தோன்றவிடாமலிருக்க.

கவிதை; பாரதிப்பிரியா
நன்றி; ஆனந்த விகடன் (14-4-02 )

தேவதை

இளைஞன் ஒருவன் சாலை யில் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது திடீரென நில் என்ற குரல் கேட்டது. நீ இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலையில் ஒரு கல் விழும் என்று எச்சரித்தது.
.
திகைத்துப்போய் இளைஞன் நிற்க, அவன் முன்பாக ஒரு கல் வந்து விழுந்தது. சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் அதே குரல் நில் இல்லாவிட்டால், வேகமாக வரும் கார் உன் மீது மோதிவிடும் என்று எச்சரித்தது.உடனே அவன் நின்று விட்டான். அப்போது ஒரு கார் வேகமாக அவனைக் கடந்து சென்றது.

இதைக்கண்டு ஆச்சர்யமடைந்த இளைஞன், குரல் கொடுப்பது யார் என்று வினவினான். உடனே அந்த குரல் நான் உன்னை பாதுகாக்கும் தேவதை என்று தெரிவித்தது. இதைக்கேட்ட அந்த வாலிபன், தேவதையே எனக்கு திருமணம் நடைபெற்றபோது, நீ எங்கே சென்றிருந்தாய்? என்றான்.

வீட்டோடு இருந்து வயலினை முழு மூச்சாக கற்று வருகிறாராம் பாவனா. ஒரு தமிழ்ப்படத்தில் வயலின் கலைஞராக வருகிறார் பாவனா. இதற்காகத்தான் வீட்டோடு இருந்து வயலின் கற்று வருகிறாராம் பாவனா

பாவனா இப்போது தமிழைத் தவிர தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகி விட்டார்.
ஜூன் 6 ம் தேதி பிறந்த நாள் கொண்டாடுகிறார் . இவர் மேலும் வளர வாழ்த்துவோம்.

உதிரும் இலை

1) இழந்து விட்டதன் மீதுதான்
ஆசை அதிகரிக்கிறது
எப்போதும்
நேற்று அப்பா
இன்று நீ.

2) அழுது விடுங்கள்
அவமதித்தர்களை
துரோகமிழைத்தவர்களை
ரணப்படுத்தியவர்களை
பிறகு எப்போதும் போல
உங்கள் குழந்தை மனதுடன்
உலா வாருங்கள்.

3) கத்துதல்
முட்டுதல்
உழுதல்
இனப்பெருக்கம் செய்தல்
இப்படி அனைத்தம்சமும் உண்டு
ஆனாலும்
ஏனோ
கறுப்பு மாடுகள்
எளிதில் விலை போவதில்லை.

நன்றி; யாழினி முனுசாமி ( உதிரும் இலை )

பங்கு

தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொண்ணுக்கும் போட்டி.
கறவ மாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் எனக்குன்னு
அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும்
அத்தன அடிதடி.
பாயில் சுருண்டு கிடக்கும் பாட்டிய
என்க்கு எனக்குனு
யாரும் சொல்லக் காணோம்...

ரூபாய் 2000 பரிசு பெற்ற கவிதை
-விஜிலா தேரிராஜன்(ஆனந்த விகடன் 14-4-02)

காதல்


GOD'S OWN COUNTRY

Q: If Kerala is God's own country which North Indian State
is "Suburbs of Paradise ?"
Ans: Himachal Pradesh.

Q: What is a "green stick fracture"?
Ans: A fracture that is incomplete and deforms the bone.

Q: Which of these is not part of the U A E ?
Kuwait, Abu Dhabi, Dubai ,Sharjah
Ans: Kuwait.

Q: What is the scientific name for "belly button" or
navel ?
Ans: Umbilicus.

Q: Which eminent Indian Writer's latest book is
"The end of India ? "
Ans: Khushwant Singh.

courtesy: Young World (Hindu-17-5-03)
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது