மொரீசியஸ் அர்த்தநாரீஸ்வரர் கோயில். . .

மதுரை:
மொரீசியஸ் நாட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில்
சுவாமிமலை ஸ்தபதிகளால் உருவாக்கப் பட்ட ஐம்பொன்
சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன.

மதுரை சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயில் நிர்வாகி
ஸ்ரீனிவாசன் நமது நிருபரிடம் கூறிய தாவது: மொரீசியஸ்
அர்த்தநாரீஸ்வரர் கோயில் சாய் பாபா பக்தர்களால்
உருவாக்கப்பட்டது.

இக்கோயிலில் ஐம்பொன் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை
செய்யப்படவுள்ளன. இதற்காக கும்பகோணம் சுவாமிமலை
ஸ்தபதி ராஜேந்திரன் குழுவினரால் ஐம்பொன்னால்
உருவாக்கப்பட்ட விநாயகர், வள்ளி தெய்வாணை முருகன்,
அர்த்தநாரீஸ் வரர், ராமன் லட்சுமணன் சீதாதேவி அனுமன்,
ராதா கிருஷ்ணன், விஷ்ணு துர்கா, அனுமன் சுவாமி சிலைகள்
மொரீசியஸ் கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சிலைகளுக்கு சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோயிலில்
இன்னும் இரண்டு நாட்களுக்கு (மே 11 மற்றும் 12) பூஜைகள்
நடக்கும்.ஐம்பொன் சிலைகள் தவிர கற்சிலைகள்,
துஜஸ்தம்பம் (கொடிக் கம்பம்) சுவாமிமலை ஸ்தபதிகளால்
உருவாக்கப்பட்டு வருகிறது.

அவைகள் விரைவில் மொரீசியஸ் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

source:

http://www.dinamalar.com/tnsplnewsdetail.asp?News_id=3948

Nice "Towel"-work

Thanks: http://www.tripntale.com/pic/277/70678
Nice "Towel"-work

மலரும் வான் நிலவும். . .

படம்; மகாகவி காளிதாஸ்
பாடியவர்கள்; டி.எம்.செளந்தர்ராஜன்
பி.சுசிலா
இசை; கே.வி.மகாதேவன்
*********************************

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மழை இல்லாமல் வளமில்லை
ஒரு விதையில்லாமல் பயிரில்லை
உழைப்பில்லாமல் உலகில்லை
உன் உறவில்லாமல் நானில்லை

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரிக்கினாய் நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனிக்கின்றாய் என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மயில்



மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.

ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும்.
ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை.
தோகையில் வரிசையாகக் 'கண்' வடிவங்கள் உள்ளன.

தோகையை விரிக்கும்
போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன.
பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும்,
பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.

பால் கொண்டு வா!

முன்னொரு காலத்தில் பேரரசன் ஒருவன் குறுநில மன்னன் ஒருவனின் நாட்டிற்கு வருகை தந்தான்.

பேரரசனுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு அரசர்களும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேரரசன், ""உங்கள் நாட்டு அமைச்சன் அறிவுக் கூர்மையில் சிறந்தவன் என்று சொல்கிறார்களே... அது உண்மையா?'' என்று கேட்டான்.

""உண்மைதான் பேரரசே!''
""அப்படியானால் அந்த அமைச்சனை அழைத்து நம் இருவர்க்கும் குடிப்பதற்குப் பால் கொண்டு வரச் சொல்லுங்கள்.

அவன் உண்மையில் அறிவுள்ளவனா என்பதைக் கண்டுபிடித்து விடுகிறேன்,'' என்று சொன்னான் பேரரசன்.
அதன்படி அமைச்சனை அழைத்த குறுநில மன்னன், ""எங்கள் இருவருக்கும் பால் கொண்டு வா,'' என்றான்.

அமைச்சனும் அழகான தட்டில் இரண்டு கிண்ணங்களில் பால் வைத்து அங்கே கொண்டு வந்தான்.

அப்பொழுதுதான் அவனுக்கு யாரிடம் தட்டை முதலில் நீட்டுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
"நம் அரசரிடம் முதலில் தந்தால் தன்னை அவமானப்படுத்தி விட்டதாகப் பேரரசன் கோபம் கொள்வான்.
மாறாகப் பேரரசனிடம் தந்தால் நம் அரசன் கோபம் கொள்வான்... என்ன செய்வது?' என்று சிந்தித்தபடி தயங்கி நின்றான்.

குறுநில மன்னனுக்கு அமைச்சனின் சிக்கல் நன்கு தெரிந்தது. "அவன் என்னதான் செய்கிறான் பார்ப்போம்' என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தான். ஆனால், அறிவுள்ள அந்த அமைச்சனோ தட்டைத் தன் அரசனிடம் நீட்டி, ""அரசே! தங்கள் விருந்தினரான பேரரசருக்கு என் கையால் பால் தருவது தகுதி ஆகாது. அதைத் தாங்களும் விரும்பமாட்டீர்கள். தங்கள் திருக்கரங்களாகலேயே தந்து விருந்தினரைப் பெருமைப் படுத்துங்கள்,'' என்றான்.


தன்னையும் விருந்தினரையும் ஒரே சமயத்தில் பெருமைப் படுத்திய அமைச்சனின் அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்தான் அரசன். அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து சிறப்பித்தான்.
அறிவுள்ளவர்களுக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.

**************************************
நன்றி; தினமலர்(சிறுவர்மலர்)










நீராடும் அழகெல்லாம். . .

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா
தேன் மொட்டு மீதிலே பூ முத்தம் பதிக்க வா
பூ முத்தம் பதித்த பின் புதுப் பாடம் படிக்க வா
புதுப் பாடம் படிக்க வா

தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
தனியறை ரகசியம் யார் அறிவார்
நான் தருவதை உனையன்றி யார் பெறுவார்
சுவருக்கும் பார்த்திட விழி ஏது
இங்கு எவருக்கும் நடப்பது தெரியாது

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டுப் பார்க்க வா வா

மணி விழி மயங்கட்டும் உறவினிலே
குளிர் பனி மழை பொழியட்டும் இரவினிலே
சுவை தரும் கனியுண்டு கொடியினிலே
அது கனிந்ததும் விழுவது மடியினிலே

நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்
நீர் தொட்ட மேனியை நீ தொட்டு பார்க்க வா வா

************
நன்றி; http://www.sukravathanee.org/forum/viewtopic.php?t=8684

தென்றல் வந்து தீண்டும் போது. . .

பாடியவர்கள் - இளையராஜா, ஜானகி
இசை - இளையராஜா
படம் - அவதாரம்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை

நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
*************************************
நன்றி;

http://rvijayakumar.page.tl/
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது